மதுரை மாநகர் மகாபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்தவர் ஜான் பாட்சா 21/19 என்பவர் கடந்த 31.01.2019 அன்று இரவு மதுரை TP ரோடு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து அபாயம் விளைவிக்கக்கூடிய கூர்மையான வாளைகாட்டி மிரட்டி ஜான் பாட்சாவிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாக 01.02.2019 அன்று C3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு.அருணாசலம் அவர்கள் புலன் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது காட்டுநாயக்கர் தெரு, மகாபூப்பாளையத்தைச் சேர்ந்த சூர்யா @ முத்துமாரி 24/19, மற்றும் புது ஜெயில்ரோடு, முரட்டன்பத்திரியை சேர்ந்த ஜாக்கி @ பிரசாத் 18/19 ஆகியோர் என விசாரணையின் முடிவில் தெரிய வந்தது. எனவே அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு வாள் மற்றும் பணம் கைபற்றப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.