36
இராமநாதபுரம், நவ.15- இராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி (மடத்துப்பள்ளி) முன்னாள் மாணாக்கர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சிங்கராயர் அடிகளார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோ. செல்வமேரி முன்னிலை வகித்தார்.
இதில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணாக்கர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பள்ளி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். முன்னாள் ஆசிரியைகள் கல்யாணி, விக்டோரியா, முன்னாள் ஆசிரியர் ஜோசப் ஏற்பாடு செய்தனர். முன்னாள் மாணாக்கரின் குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடந்தது.
You must be logged in to post a comment.