Home செய்திகள் வாட்ஸ் மூலம் 50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த மாணவர்கள் – தாங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் வழங்கி மகிழ்ச்சி….

வாட்ஸ் மூலம் 50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த மாணவர்கள் – தாங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் வழங்கி மகிழ்ச்சி….

by ஆசிரியர்

கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் மிகப்பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1968 முதல் 1969 ம் ஆண்டில் பத்தாம் வகுப்ப பயின்ற மாணவ, மாணவியர் சந்திப்பு மற்றும் பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இன்று ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் தங்களது முதுமை பருவத்தில் தங்களது மாணவப்பருவத்தை நினைவுகூறும் வகையில் வாட்ஸப் பேஸ்புக் மூலமாக ஒன்றிணைந்து இன்று பள்ளியில் நெகிழ்ச்சி விழாவை நடத்தினர்.

மாணவப்பருவத்தில் துள்ளி திரிந்த தங்கள் பள்ளி மற்றும் தங்களது நண்பர்களை காணும் அவலில் அன்று பயின்றவர்களில் 33பேர் ஆர்வமுடன் மட்டுமின்றி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 50 ஆண்டுகள் கழித்து தங்களது நண்பர்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கியும், இன்று தான் பூமி பிறந்த குழந்தைகள் போன்று தங்களது அன்பினை பகிர்ந்து கொண்டனர். தற்போதைய வயோதிகப்பருவத்தில் ஒருவருக்கொருவர் கைத்தாங்கல் கொடுத்து, தங்களுக்கு கற்றுகொடுத்த ஆசிரியர்கள் மூன்றுபேரையும் வரவழைத்து கால்களை தொட்டு வணங்கி நெகிழச்செய்தனர்

மேலும் தாங்கள் பயின்ற பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்காக சுமார் 2 லட்ச மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து கொடுத்து அதனை பழைய ஆசிரியர்கள் கையால் திறக்கச்செய்து மகிழ்ந்தனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் என எல்லோரும் பழைய மாணவர்களை அன்புடன் வரவேற்று மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி நடத்தி தங்களது அன்பினை வெளிப்படுத்தினர். தங்களது பாலிய நண்பர்களின் கைகளையும், தோள்களையும் பற்றி கொண்டு, தற்போது பயிலும் மாணவர்களை பார்த்து கை அசைத்து தங்களது மகிழ்ச்சி எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்தி காட்டியது, அவர்களின் இளமை குறும்புகளை பளிச்சிட செய்ததது.

இதுகுறித்து பேட்டி கூறிய முன்னாள் மாணவி சூரியபிரபா கூறுகையில், “ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம் மிக்க மகிழ்ச்சியாகவும் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் உள்ளது. இதனை எங்களுக்கு வழங்கிய இறைவனுக்கு தான் நன்றி. எங்கள் ஆசிரியர்கள் மூன்றுபேரைத்தான் பார்க்க முடிகிறது. கல்வி மட்டுமே அழியாதது” என்றார் நெகிழவுடன்.

முன்னாள் ஆசிரியர் சண்முகம் கூறுகையில். ரொம்ப சந்தோஷமாக உள்ளது ஐம்பத ஆண்டுகளுக்கு முன் என்னிடம் பயின்ற மாணவர்களை பார்த்தது சந்தோஷம் என்றார்.

இந்த நெகிழ்ச்சி விழாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றாக பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களல் நான்கு பேர் தவிர 33 பேர்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர். வயோதிகம் காரணமாக தனது துணையுடன் சிலர் கலந்துகொண்டது தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது நெகிழச்சியான தருணமாக அமைந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!