கொரானா பரவல் தடுப்பு தேசிய ஊரடங்கு உத்தரவினால், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். கட்டடம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், நாடக கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அரசு அறிவித்துள்ளது. மாற்று திறனாளிகள் தங்களது குடும்ப அட்டைகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாயுடன் ரேஷன் பொருட்களை மட்டும் பெற்றுள்ளனர்.
இந்த ஆயிரம் ரூபாய் மூலம் தங்கள் குடும்பத்தை நடத்த வழியில்லாத மாற்றுதிறனாளிகள், மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கியதைபோல், தங்களுக்கும் கொரானா நிவாரண தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தி கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமுதி வட்டார மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலர் ஸ்டாலின், பொருளாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கமுதி தாசில்தார் ராமசாமியிடம் (பொறுப்பு) கோரிக்கை மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.