தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கருப்பு சட்டை அணிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதில் கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், கமுதி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்செல்வி போஸ், கமுதி பேரூர் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மண்டபம் பேரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக., நகர் செயலர் டி.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா, மாவட்ட மீனவரணி முன்னாள் துணை அமைப்பாளர் ஒய்.அயூப் கான், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி எஸ்.தில்லை குமார், மண்டபம் பேரூர் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் த.வெள்ளைச்சாமி, வார்டு செயலர்கள் எம்.ரவி, ஏ.கஜினி முகமது, பா.கீத்தானந்த் (இளைஞரணி அமைப்பாளர்), தி.கோகுல்கிருஷ்ணா (மாணவர் அணி), எம்.இப்ராம்ஷா (மீனவரணி), உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமேஸ்வரத்தில் நகர் பொறுப்பாளர், கே.இ.நாசர்கான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடியில் நகர் செயலர் சேது கருணாநிதி, நகராட்சி முன்னாள் உறுப்பினர் சுதா கருணாநிதி, வேலவன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
You must be logged in to post a comment.