Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உயிருக்கு போராடியவரை உடனடியாக மீட்ட மதுரை செஞ்சிலுவை சங்கம்..

உயிருக்கு போராடியவரை உடனடியாக மீட்ட மதுரை செஞ்சிலுவை சங்கம்..

by ஆசிரியர்

இன்று (10-4-2019) புதன்கிழமை  மதுரை ரயில்வே காலனி Running Bungalow பகுதியில்  சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடி கிடப்பதாக  அப்பகுதியினர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு தகவல்  தெரிவித்தனர்.

அத்தகவலை தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தினர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட முதியவர்க்கு முதலுதவி அளித்து  அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேல் சிகிச்சைக்காக அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.

செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!