மதுரையில் தேர்தல் நடத்தை விதியை அமல்படுத்தியதை காரணம் காட்டி காந்தி சிலையை துணியால் மூடியது மதுரை மாநகராட்சி ஊழியர்கள். தேசத்தந்தை நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை சுட்டி காட்டி கீழைநியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தி உடனடியாக மாநகராட்சி ஆணையர் விசாகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக மூடப்பட்ட சிலை திறக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகளில் தேர்தல் ஆணையம் மறைக்க உத்தரவிட்டதின் பேரின் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் சிலைகள் துணிகளால் மூடப்பட்டது, இவ்வரிசையில் தேசப்பிதாவின் சிலையும் ஊழியர்களால் மூடப்பட்டது அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தியது, ஆனால் தவறை சுட்டிகாட்டியவுடன் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையர் பாராட்டுதலுக்குரியவர்.
செய்தி வெளியிட்டு சில மணிநேரத்திலேயே காந்தி சிலையில் துணிய அகற்ற உதவிய (சத்தியப்பாதை மாத இதழ்) கீழை நியூஸ் இணையதள செய்திக்கும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.