Home செய்திகள் இராஜபாளையத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளால் விபத்துக்குள்ளான பொதுமக்கள் .50க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து கோசாலைக்கு கொண்டு சென்ற வட்டாட்சியர் .

இராஜபாளையத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளால் விபத்துக்குள்ளான பொதுமக்கள் .50க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து கோசாலைக்கு கொண்டு சென்ற வட்டாட்சியர் .

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் ரோடு . பழைய பேருந்து நிலையம் .பஞ்சு மார்க்கெட் போன்ற பகுதிகளில் வீட்டில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு மாடுகள் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துக் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும் அப்போது விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்களில் பலருக்கு காயங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது .இதுகுறித்து இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நள்ளிரவில் வீதிகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் உதவியுடன் 50க்கு மேற்பட்ட மாடுகளை பிடித்து லாரிகளில் ஏற்றி கோசாலை கொண்டு செல்லப்பட்டன இந்த தகவல் இருந்து அறிந்து வந்த மாட்டு உரிமையாளர்கள் வட்டாச்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .மாடுகளை பிடித்தவுடன் வரும் நீங்கள் மாடுகளை என் வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை என கூறி அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி எச்சரித்து மாடுகளை கொண்டு சென்றனர் .இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!