மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடை பிடித்து அறவழி முழக்கப் போராட்டம் நடந்தது.கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்திய ஊரடங்கு கால கட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை, எளியோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகள் , தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்கள் நடந்தேறின.கொரானா ஊரடங்கு நடவடிக்கை என்ற பெயரால் மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய ஊரடங்கு அரசியலை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ.,. கட்சி சார்பில் இன்று (மே 16) அறவழி முழக்கப் போராட்டம் நடந்தன.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடந்த இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்டிபிஐ., கட்சி மாநில பொதுச்செயலர் அப்துல் ஹமீது மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து பேசினார்.மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் சுபைர், தொகுதி செயலர் நூருல் ஜமான், கீழக்கரை நகர் தலைவர் ஹமீது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர். பரமக்குடியில் மாவட்டத்தலைவர் நூர் ஜியாவுதீன், ராமநாதபுரத்தில் சட்டமன்ற தொகுதி (மேற்கு) தலைவர் பீர் முகைதீன், சட்டமன்ற தொகுதி (கிழக்கு) தலைவர் நியாஸ் கான், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் தலைவர் ஆசாத், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்டச் செயலர் முஹமது இஸ்ஹாக் தலைமையிலும் நடைபெற்றது இதில் 210 பேர் கலந்து கொண்டனர்.ஊரடங்கு கால கட்டத்தில் வருவாய் பாதித்துள்ள மக்களுக்கு அரசு வாழ்வாதாரம் வழங்க வேண்டும், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை நிறுத்த வேண்டும், கொரானா பரவல் என சொல்லி மக்கள் உரிமை பறிக்கப்படுவதை விலக்கி கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன.சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் குடை பிடித்து நடந்த இந்த அறவழி முழக்க போராட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றன.
You must be logged in to post a comment.