7
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விவேக் 29, பெர்க் உதயணன் 30. இவர்கள் கொரானா தொற்று பரவல் தடுப்பு களப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரானா தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 20 ஐ தொட்ட நிலையில், 10 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
You must be logged in to post a comment.