9
இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய நாட்டின் 72 வது சுதந்திர தின விழா இராமநாதபுரம் வட்டார தலைவர் முன்னாள் இராணுவ வீரர் எஸ்.கோபால் தலைமையில் இராமநாதபுரம் புளிக்காரதெருவில் நடைபெற்றது .இவ்விழாவில் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் ஜப்பார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எம் .பாஸ்கர சேதுபதி, கே. எம். சந்திரன், ஆர்.ஞானசேகரன், என். ரமேஷ், எஸ். சுரேஷ் , ஜெகன், எஸ்.குருநாதன் உள்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.