நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவின்போது சென்னையில் எழுந்த பிரச்னை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார்.மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி மருது பாண்டியன் முன்னிலை வகித்தார். பரமக்குடி சட்டமன்றமுன்னாள் உறுப்பினர் டாக்டர் முத்தையா, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சாமிநாதன், மகளிரணி மாவட்ட செயலர் கவிதா சசிகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலர் என்.ஆர்.பால் பாண்டியன், அம்மா பேரவை மாவட்ட செயலர் சேது பாலசிங்கம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலர் சரவணகுமார்,ராமநாதபுரம் ஒன்றிய செயலர் அசோக்குமார்,பரமக்குடி நகர் செயலர் எம்.கே.ஜமால், ராமநாதபுரம் நகர் முன்னாள் செயலர் கே.சி.வரதன், மண்டபம் நகர் செயலர் சீமான் மரைக்காயர், மாவட்ட பிரதிநிதி சீனி காதர், மாவட்ட வர்த்தக அணி துணை செயலர் பூபதி ரஜினி காந்த், மண்டபம் ஒன்றிய மீனவரணி செயலர் ஞானம், மண்டபம் பேரூர் முன்னாள் கவுன்சிலர் நம்பு வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகி ராமன் நன்றி கூறினார்.
35
You must be logged in to post a comment.