Home செய்திகள் அன்பழகன் எம்எல்ஏ மறைவு. ராமநாதபுரம் திமுகவினர் அஞ்சலி

அன்பழகன் எம்எல்ஏ மறைவு. ராமநாதபுரம் திமுகவினர் அஞ்சலி

by mohan

சென்னையில் கொரானா பேரிடர் கால நிவாரணப் பணியில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தீவிர களப்பணி ஆற்றினார். ஊரடங்கு உத்தரவினால் தொழில் முடக்கத்தால் வருவாய் இழந்தோருக்கு அரிசி, மளிகை பொருட்கள், முகக் கவசம் வழங்கினார். கொரானா தொற்று பரவலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் மே 2 ஆம் தேதி, அவரது உடல் நலம் திடீரென பாதித்தது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு கொரானா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

இதனையடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலை கடந்த சில நாட்களுக்கு முன் மோசமடைந்து மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு, திமுக நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் ஜெ.அன்பழகன் உருவப் படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். அஹமது தம்பி, மாநில மகளிரணி துணை தலைவி பவானி ராஜேந்திரன் (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்), மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசை வீரன்(பரமக்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்), ஒன்றிய செயலர் கே.டி.பிரபாகரன்,தொமுச., மாவட்ட செயலர் நா. மலைக்கண்ணு, நகர் செயலர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.என். இன்பா ரகு, கோட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) குணசேகரன், நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் டி.ஆர்.எஸ்.அய்யனார், போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!