18
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் அமைந்துள்ள செஸ்ட் ஏஞ்சல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு அரிசி, பருப்பு காய்கறி வழங்கப்பட்டது. வாலாந்தரவை ஊராட்சி மருது நகர் அதிமுக., கிளை செயலர் கணேசன் நலத்திட்ட உதவி வழங்கினார். கொரானா பரவல் தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுள்ள என்மனம் கொண்டான் ஊராட்சி துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு ஆடை போர்த்தி பாராட்டினார். அனைவருக்கும் காய்கறி தொகுப்பு வழங்கினார். மருது நகர் அதிமுக., இளைஞர் பாசறை நிர்வாகிகள் செந்தில், சேது, தினேஷ், அழகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.