9
ராமநாதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 700க்கும் மேற்பட்ட மீனவர்களை இராமநாதபுரம் எம்பி., நவாஸ் கனி சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.மீனவர்களுக்கு உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார். கடந்த முறை மீனவர்களை எம்பி.,சந்தித்த போது,உணவு பற்றாக்குறையாக இருப்பதாகவும், போதிய அளவு உணவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, போதுமான உணவுகளை வழங்க அதிகாரிகளுக்கு நவாஸ் கனி எம்பி., அறிவுறுத்தினார்.இதற்கு முன்னுதாரணமாக அனைத்து மீனவர்களுக்கும் தாமே முன்வந்து சிறப்பான உணவை சமைத்து முகாம்களில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்தார்.
You must be logged in to post a comment.