11
இராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெரு மலைராஜன், 55. கூலித்தொழிலாளி. இவரது மகன் இளையராஜா, 7. இரண்டாம் வகுப்பு மாணவன். மலைராஜனுக்கும், அவரது மனைவி மாரீஸ்வரிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மகனுடன், மலைராஜன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இருவரின் உடல்கள் சுடுகாட்டம்பட்டி தரவை அருகே தண்ணீரில் அழுகிய நிலையில் கிடந்தன. இருவரின் உடல்களை ராமேஸ்வரம் நகர் போலீசார் மீட்டு சாவிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
You must be logged in to post a comment.