15
இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இராமநாதபுரம் அஞ்சலகத்துறை இணைந்து ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம், பள்ளி வளாகத்தில் இன்று (11.01.2020) நடந்தது.பள்ளி முதல்வர் நந்தகோபால், இராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் வி.மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். ராமநாதபுரம் அஞ்சலகத்துறை வணிக மேலாளர் சீதாராமன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக அஞ்சல தலைமை அதிகாரி திருவாசகம் முன்னிலை வகித்தார்.ஆதார் எடுக்காத மாணவ, மாணவியர்களுக்கு ராமநாதபுரம் அஞ்சலகத்துறை சிறப்பு முகாம் மூலம் பள்ளி நூலகத்தில் வைத்து 120 மாணவர்கள் ஆதார் சேர்க்கை பயன் அடைந்தனர்.இச்சிறப்பு முகாமில் எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 92பேரும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 28 பேர் பயன் அடைந்தனர்
You must be logged in to post a comment.