17
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரைச் சேர்நத அழகு மகன் சக்திவேல், 60. இவர் ஆனந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பெட்டி கடை வைத்துள்ளார். இங்கு சில்லரை விலைக்கு பெட்ரோல் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் படி சக்திவேல் கடையில், ஆர்.எஸ்.மங்கலம் காவல் சார்பு ஆய்வாளா , சதீஷ்குமார் சோதனை நடத்தினார். கடையில் விற்பனைக்கு பதுக்கிய வைத்திருந்த 10 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தார்.
You must be logged in to post a comment.