15
இராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் மகேஷ்வரன் தலைமை வகித்தார். கணித முனைவர் ஜெயக்குமார் வரவேற்றார். அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவியருக்கு
மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, ஆசியா சோசியல் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அருண் குமார் கவுன்சிலர் ஜெயந்தி ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூபதி ஆகியோர் கேடயம் வழங்கி கவுரவித்தனர். சமூக அறிவியல் ஆசிரியர் ஜெப்ரின் மாணாக்கரை பாராட்டி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், நன்றி கூறினார் மாணாக்கரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
You must be logged in to post a comment.