Home செய்திகள் அவனியாபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி..

அவனியாபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி..

by ஆசிரியர்

அவனியாபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அவனியாபுரம் சரக காவல் உதவி ஆணையர் செல்வகுமார் டெங்கு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். அவனியாபுரம் முத்துப்பட்டி சாலையில் ஆர் ஜி சி தனியார் பள்ளி உள்ளது. பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் கவிதாதலைமையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கியது.

அவனியாபுரம் சரக காவல் உதவி ஆணையர் செல்வகுமார். போக்குவரத்து ஆய்வாளர் தங்கப்பாண்டியன் பேரணியை துவக்கி வைத்தனர். அவனியாபுரம் நகரின் முக்கிய பகுதிகள் ஆன பேருந்து நிலையம் பிரசன்னா காலனி பெரியார் நகர் திருப்பரங்குன்றம் சாலை வழியாக மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணியை நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொசுவை விரட்டுவோம் டெங்குவை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர் பள்ளி தாளாளர் கீதா, உதவி தலைமை ஆசிரியர் சிந்தியா ஆசிரியைகள் ஜெயா. பிரியதர்ஷினி ஜோதி.மாலா பிகா.மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!