12
மதுரை ரயில் நிலையம் அருகே நேற்று தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வரும் பொழுது ரயில் பெட்டிக்குள் இருந்து எரிந்த நிலையில் சில கட்டுகள் ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயணிகள் வழி செலவுக்காக சுற்றுலா ஏஜெண்ட்கள் வைத்திருக்கலாம் கூறப்படுகிறது. மேலும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது. மேலும் எறிந்த நிலையில் உள்ள பணத்தை தடயவியல் நிபுணர்கள் மீட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.