இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இடையத்தூர் கண்மாய், வேணுநாதஉடையார் கால்வாய் ஆகியவற்றில் முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 141 பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் கால்வாய்கள் உட்பட 30,55,890 கன மீட்டர் பரப்பளவிற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன.339 மடைகள், 79 கலுங்குகள் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் (2020-21) ரூ.38.79 கோடி மதிப்பில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.பரமக்குடி வட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இடையத்தூர் கண்மாய் புனரமைப்பு பணிகள் ரூ.77.94 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கண்மாயானது 147.65 எக்டேர் ஆயக்கட்டு பரப்பளவு கொண்டது. இக்கண்மாயில் 3.90 கி.மீ நீளம் கரையை பலப்படுத்துதல், 2 கி.மீ வரத்து கால்வாய் தூர்வாருதல், 3 மடைகள் பழுதுபார்ப்பு, 1 மடை மீளக்கட்டுதல், 1 கழுங்கு மறுகட்டுமானம் மற்றும் சீமைக்கருவேள மரங்களை அகற்றுதல் போன்ற புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேணுநாத உடையார் கால்வாயில் ரூ.30 லட்சம் மதிப்பில் 8.50 கி.மீ நீளம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரமக்குடி ஒன்றியம், நெல்மடூர் கிராமத்தில் குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்; எம்.லதா, வட்டாட்சியர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.சந்திரமோகன், எஸ்.செந்தாமரைச்செல்வி உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.