பொன்னமராவதி அருகே ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பொன் மணி.பாஸ்கரன் வழங்கினார்…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியில் ரெகுநாதபட்டி, சீகம்பட்டி, கோபால்பட்டி, வைரவன்பட்டி, வெடத்தலாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் கொரோனா எதிரொலியினால் 144 தடை உத்தரவு சமயங்களில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஏழை எளிய ஊராட்சி மக்களுக்கு தலா 10 கிலோ எடைகொண்ட 8 வகை காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பொன்னடப்பட்டி மணி பாஸ்கரன் வழங்கினார். உடன் ஊராட்சித்தலைவர் பெரியபெண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், நிர்வாகிகள் உலகம்பட்டி ஒன்றியக்கவுன்சிலர் கருப்பையா, பூவலிங்கம், கிளைச்செயலாளர்கள் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.