Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நத்தம் ஊராட்சியை கமுதி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு..

நத்தம் ஊராட்சியை கமுதி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.8-

நத்தம் ஊராட்சியை கமுதி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை  7 கிராம மக்கள் இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா நத்தம் ஊராட்சிக்கு ஆண்டாள்புரம், முத்தாதிதபுரம், கள்ளிகுளம், மணி நகர் உட்பட 7 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நத்தம் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இது குறித்து நத்தம் ஊராட்சி மக்கள் கூறுகையில், ஊராட்சி பெண்களுக்கு வருவாய் அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கைவிடப்படும். வீடு, குடிநீர் உள்ளிட்ட வரிகள் உயரும். இதனால் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கக்கூடாது என்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com