இராமநாதபுரம், அக்.3- தொழிலாளர் முன்னேற்ற சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்பி, அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கையின்படி ) ராமநாதபுரம் அரண்மனை முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
தொமுச ராமநாதபுரம் மாவட்ட கவுன்சில் செயலாளர் ச.வின்சென்ட் அமலதாஸ் தலைமை தாங்கினார். ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலர் எம்.சிவாஜி நிறைவு உரையாற்றினார்.
எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.மயில் வாகனன், விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எம். முத்துராமு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், ஏஐடியுசி சுப்ரமணி, டாஸ்மார்க் தொமுச மாவட்ட செயலாளர் எம்.எஸ் ராஜா உரையாற்றினர். தொமுச சார்பில் கே. காஞ்சி, தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் அழகப்பன் கலந்து கொண்டனர். எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.