35
இராமநாதபுரம், ஆக.14 – இராமநாதபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் INDIA கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து, ஆக.22 முதல் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, திருவாடனை பகுதிகளில் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்துவது என ஆலோசனை வழங்கப்பட்டது. தமுமுக மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் சுலைமான், மமக நகர் செயலாளர் தாஜுதீன் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.