Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உசிலம்பட்டியில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..

உசிலம்பட்டியில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

உசிலம்பட்டியில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 7850 வழங்கிட வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வுதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓய்வுதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 7850 வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வுதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்ற சூழலில்

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வுதியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள், ஓய்வு பெற்ற ஊராட்சி எழுத்தா்கள், ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராமப்புற உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் போன்ற சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ 7850 வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதில் ஒய்வுபெற்ற ஒய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com