100 நாட்களுக்கு பிறகு கிராமப்புற கோயில்களில் வழக்கம்போல் பூஜைகள் சமூக இடைவெளிவிட்டு திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி நாகம்மா கோவிலில் பிரோதச விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி நாகம்மாள் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது இங்கு 12 ராசிக்குரிய 27 நட்சத்திர லிங்க கோவில் உள்ளது ஆனி மாத வளர்பிறை பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற பிரதோஷ விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பொது ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அடைக்கப்பட்டிருந்தது .இதற்கு பக்தர்களும் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டும் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக அரசானது ஆண்டுக்கு 10,000 ரூபாய் வருமானம் வரும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் மட்டும் திறந்து சிறப்பு பூஜைகள் நடை பக்தர்களை அனுமதித்து பூஜைகள் நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தது அதனடிப்படையில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பூஜையில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.