10
தமிழகமெங்கும் தைத்திருநாளையொட்டி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.இவ்விழாவில் கல்லூரி பேராசியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.