9
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு “அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு” என்ற அடிப்படையில். நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் பேராசிரியர் அலாவுதீன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுர மாவட்டத்தின் வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குனர் கருணாகரன், டிப்ளமோ மாணவ, மாணவிகளுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கி கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வேலைவாய்ப்பு துறை சார்ந்த அதிகாரிகளும், வல்லுனர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் துணை முதல் சேக்தாவூது ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.