9
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பை ஓட்டி தமிழக கடலோர பகுதி மற்றும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையத்தில் 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் டிஎஸ்பி மன்னர் மன்னன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான 70 காவல்துனை அதிகாரிகளை கொண்ட குழுவினர் காலை 7 மணி முதல் பயணிகளை உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள்.
இப்பணியில் இருபது வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து சோதனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.