12
திண்டுக்கல்லில் கடந்த 45 நாட்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.மேலும், இருசக்கர வாகனம் ஓட்டிய 50 பள்ளி மாணவர்கள் பிடித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூபாய் 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியபோது 18 வயது பூர்த்தி அடையாத பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் அவ்வாறு இருசக்கர வாகனம் ஓட்டி சிக்கிக்கொள்ளும் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து இனி என் மகனிடம் இருசக்கர வாகனத்தின் சாவியை கொடுக்க மாட்டேன் என்று கடிதம் எழுதி வாங்குவதுடன் அபராதம் வசூலிக்கிறோம் என்று கூறினார்.
You must be logged in to post a comment.