11
இராமநாதபுரம் ஆதம் நகரில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக., மாவட்ட பொருளாளர் ஜெ.ஆயிசா தலைமை வகித்தார்.
இப்போராட்டத்தின் போது அவர் கூறியதாவது: இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த ராமேஸ்வரம் — ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மதுக்கடையை அகற்றாவிடில், பாமக., சார்பில் விரைவில் அகற்ற களம் இறங்குவோம் என்றார்.
You must be logged in to post a comment.