11
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை தொடக்கப் பள்ளியில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர்கள் அய்யப்பன், மைதீன் பீவி , பீமா, மன்னார் வளைகுடா அறக்கட்டளை திட்ட மண்டல அலுவலர் ரகுவரன், களப் பணியாளர் ஜோதி, பங்கேற்றனர். மாணவ மாணவிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படும் தீங்குகள் குறித்து உரையாற்றினர்.
அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகை ஏந்திய படி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.