Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம்…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம்…

by ஆசிரியர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம் 25.05.2021 அன்று காலை 11.30 மணி அளவில் Dr.S.பொற்கொடி, M.B.B.S.,D.P.H., மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரால் திறந்து வைக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவிட் நிவாரணப் பணிகளுக்காக சேவையாற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக பேரிடர் உதவி மையம் நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்க உள்ளது. இதில் மருத்துவ உபகரணங்கள், கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு உணவுப் பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தல், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தல், ஆக்சிஜன் பல்ஸ் மீட்டர் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான உதவி மையத்தை இன்று 11:30 மணி அளவில் Dr.S.பொற்கொடி, M.B.B.S.,D.P.H., மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்  திறந்து வைத்து வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர் தலைமை தாங்கினார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசின் முன்னிலை வகித்தார். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர்கள் செய்யது முஹம்மது இப்ராஹிம் மற்றும் சேகுதாவுத் நிகழ்ச்சி முழுவதையும் ஒருங்கிணைத்தனர்.

கீழைஅஸ்ரப் ஊடகபிரிவு பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப்இந்தியா கீழக்கரை.. வாட்ஸப்_9042335718 8870121561.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!