ஒன்றிணைவோம் வா அமைப்பின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பெறப்பட்ட 60ஆயிரம் மக்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் தெற்குமற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர்
தமிழகமெங்கும் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் தமிழகமெங்கும் 18 லட்சம் அழைப்புகள் அத்தியாவசிய உதவிகள் கேட்டு ஒன்றிணைவோம் வா உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அதனை ஏற்று தமிழக அனைத்து மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்தனர்.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக விருதுநகர் தெற்கு மற்றும் வடக்குமாவட்ட செயலாளர்களான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுதலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றினை வோம் வா என்பதன் மூலம் மாவட்ட முழுவதிலும் பல லட்சம் மனுக்கள் பெறப்பட்டது அதில் அரசு அலுவலகங்கள் மூலம் சரி செய்யப்படும் 60ஆயிரம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன் இடம் வழங்கப்பட்டது இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனுக்களை செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.