திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்களுக்கு கொண்டாடினார்கள். இவ்விழாவிற்கு அம்மையநாயக்கனூர் பேரூராட்சித் தலைவர் தண்டபாணி, திண்டுக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். விழாவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், நூத்துலாபுரம் ஊராட்சி பச்ச மலையான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ், மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன், ஜேசுராஜ், பேரூர் இளைஞர் பாசறை செயலாளர் ஜெயதேவன், வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மகாலட்சுமி ஸ்ரீதர், ஒன்றிய தகவல் ஒன்றிய செயலாளர் குமரேசன், நகர இளைஞரணி செயலாளர் பூக்கடை பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
9
previous post
You must be logged in to post a comment.