Home செய்திகள் கொடைரோடு அருகே பாதையை மறித்து கட்டிடம் கட்டியதால் மக்கள் போராட்டம் .

கொடைரோடு அருகே பாதையை மறித்து கட்டிடம் கட்டியதால் மக்கள் போராட்டம் .

by mohan

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மூலமாகஅரசு புறம்போக்கு நிலத்தையும் ,அதன் அருகே உள்ள விவசாய தோட்டத்துப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு கட்டிட பணிகளை துவங்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி விவசாய தோட்டத்து குடியிருப்புவாசிகள் அப்பகுதியில் குவிந்து அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் .எனினும் கட்டிடப் பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் இரவோடு இரவாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டதால் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான காவல்துறையினர் கட்டிப் பணிகளை தடுத்து நிறுத்தி இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முறையின்றி விவசாய தோட்டத்து பாதையை மறித்தும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடப் பணிகளைத் துவக்கிய சுங்கச்சாவடி நிர்வாகத்தினரை இரவோடு இரவாகவே கட்டிடப் பணிகளை நிறுத்தி கட்டிடப்பொருட்களை அப்புறப்படுத்த வைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் கொந்தளித்துள்ள நிலையில் மத்திய அரசு நிறுவனமான கொடைரோடு சுங்கச்சாவடி நிர்வாகமும் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகளிடையும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com