63
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டையில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமை தாங்கினார்.நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், நிலக்கோட்டை ஆய்வாளர் ராஜேந்திரன், வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சிலைமணி, சார்பு ஆய்வாளர்கள் ராம் சேட், அருண்பிரசாத் மத்திய தேசிய காவல் படையினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டனர். வாக்களிக்க தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
You must be logged in to post a comment.