8
செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவாசல் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கும் ஒன்றிய கவுன்சிலர் ஷகிலா அஜீஸ், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் முன்னிலையில் அரிசி, காய்கறிகள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் ராபியா நர்கீஸ் பானு, நெடுவாசல் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தனபால் அவர்களும் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் உத்திரங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் லெனின் மேஷாக் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.
You must be logged in to post a comment.