தென்காசி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த பயிற்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.இதில் தீ பாதுகாப்பு முறைகள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் விளக்கினார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி துவங்கி மருத்துவமனை வளாகம் மற்றும் உட்பிரிவு பகுதிகளில் தூய்மைபடுத்துதல், வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், இதனை மையப்படுத்தி விழிப்புணர்வு பேரணிகள் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட தீயணைப்பு பயிற்சி அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த பயிற்சி அளித்தனர். அதில் தீ விபத்தின் போது நடந்து கொள்ளும் முறை, நோயாளிகளை வெளியேற்றும் முறை,தீ அணைக்கும் அனைத்து வழி முறைகள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் விளக்கினார்.மேலும் செய்முறை பயிற்சிகள் மூலம் பணியாளர்கள் ராஜ்குமார், விஸ்வநாதன், கார்த்தியன் மற்றும் ராமசாமி ஆகியோரால் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.இரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் மரு.ராஜேஷ், மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள்,செவிலியர்கள், ஆய்வகநுட்பனர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவ பயிற்சி மாணவர்கள், செவிலிய மாணவர்கள், மற்றும் பிற பணியாளர்கள் சுமார் 100 நபர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா தீ விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். உதவி தீயணைப்பு அலுவலர் வெட்டும் பெருமாள் தீயணைப்பு பயிற்சியின் அவசியத்தை எடுத்துக் கூறினார். மருத்துவ கண்காணிப்பாளர் மரு.இரா.ஜெஸ்லின் இப்பயிற்சியினை மாதம் ஒருமுறை பணியாளர்களுக்கு அவசியம் வழங்குமாறு கேட்டுக்கொண்டு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.