Home செய்திகள் காவல்துறை எப்போதும் துணை நிற்கும்; திருநங்கைகளிடம் தென்காசி காவல்துறை சார்பில் அறிவுரை..

காவல்துறை எப்போதும் துணை நிற்கும்; திருநங்கைகளிடம் தென்காசி காவல்துறை சார்பில் அறிவுரை..

by mohan

திருநங்கைகளுக்கு காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என்றும், திருநங்கைகள் மத்தியில் முக்கிய அறிவுரையும் வழங்கப்பட்டது. தென்காசியில் பேருந்து நிலையம், கோவில், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில், இதனை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை காவல் நிலையம் வரவழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. காவல் நிலையத்தில் குறுகிய காலத்தில் அதிகப்படியான புகார்கள் திருநங்கைகள் தங்களை அசிங்கமாக பேசுவதாகவும், மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு சில திருநங்கைகள் செய்யும் இச்செயல் ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவும், இது போன்ற செயலை யாரும் செய்யவோ அல்லது செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும், அரசு திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. எனவே அதற்கு முயற்சி செய்து சுய தொழில் தொடங்கலாம் எனவும், உங்களுக்கு காவல் துறை எப்போதும் துணை நிற்கும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com