நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் நெல்லை,தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். “விடுதலைப் போரில் தமிழகம்” என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. அப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் ( ஏ4 அளவு தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல்) எழுத வேண்டும். மாணவர்கள் தங்களின் படைப்புக்களை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நவம்பர் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன் அரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புகளை அனுப்பிய மூன்று மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் நவம்பர் 27 ஆம் தேதி நெல்லை அருங்காட்சியத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்டக் காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 .மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.