Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு..

தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பணியின் போது இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.அந்தவகையில், தென்காசி மாவட்டம் ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் தென்காசி மாவட்டத்திற்கென புதிதாக காவலர் நீத்தார் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின் போது இன்னுயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள்,காவல் ஆளினர்கள் என அனைவரும் மலர் வளையம் வைத்து,60 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக பணியின் போது இன்னுயிர் நீத்த துணைக் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் மற்றும் சார்பு ஆய்வாளர் வெற்றிவேல் குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களை கௌரவப்படுத்தி ஆறுதல் கூறினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com