செங்கோட்டை பகுதியில் கொரோனா காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவளித்து உதவிய தன்னார்வலர்களை கடையநல்லூர் எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா பாராட்டி ஊக்கப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கினார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஜேசிஐ தொண்டு அமைப்பு சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் முதியோர், ஆதவரற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் தினந்தோறும் மேலே குறிப்பிட்டவா்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இந்த தன்னார்வ சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஜேசிஐ அமைப்பினா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவா் இராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலா்கள் இராமதாஸ் முன்னாள் இராணுவ வீரர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தோணிராம் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா கலந்து கொண்டு 125 தன்னார்வலா்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கொரோனா காலத்தில் செய்த சேவையை பாராட்டி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் சுடர் ஒளி இராமதாஸ், நித்யகல்யாணி, பேச்சியம்மாள், பிச்சைநாதன் (எ)குமார், மனக்காவலச் செல்வன், சிவக்குமார், கணேசன், ஜித்து, முல்லை வனநாதன், நவாஸ்கான், சின்னக்குட்டி, மகேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் நித்யானந்தன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் ஜேசிஐ அமைப்பு தொண்டு நிறுவனம் சார்பில் செய்யப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.