Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

by mohan

தென்காசியில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது. இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.07 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உதவித்தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 272 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக  உதவியாளர் (நிலம்) மு.சேக் அப்துல்காதர்,மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com