Home செய்திகள் பாவூர்சத்திரம் அருகே ஆதார் சிறப்பு முகாம்..

பாவூர்சத்திரம் அருகே ஆதார் சிறப்பு முகாம்..

by mohan

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வுக் குழு, அஞ்சல் துறை சார்பில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூரில் ஒரு நாள் ஆதார் சேவை சிறப்பு முகாம் நடைபெற்றது. அஞ்சல் உபகோட்ட ஆய்வாளர் T.ஜோதி தலைமை வகித்தார். கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் P.பாண்டியராஜ், இந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் K.கதிர்வேல்முருகன், ஊராட்சி செயலர் T..தங்கசெல்வன் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க உறுப்பினர் SRM ஓம்தங்கம் வரவேற்றார். கண்தான மாவட்டத்தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனருமான KRP இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். கூட்டுறவு வங்கி இயக்குனர் K.கதிரவன் முகாமினை தொடங்கி வைத்தார். வணிக அலுவலர் சங்கரநாராயணன், அஞ்சல் நிலைய அதிகாரி PK ராஜன், சமூக ஆர்வலர் ஜெயசிங், R.வைகுண்டராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஆதார் பெயர், முகவரி திருத்தம், செல்போன் எண் சேர்க்கை,திருத்தம், புதிய கார்டு எடுத்தல், 5வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பழைய கார்டு புதுப்பித்தல் போன்ற சேவைகளை மேற்கொள்ளப்பட்டன. முடிவில் M.கீதா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com