Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…

தென்காசி மாவட்டத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…

by mohan

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக 25 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபினபு IPS உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் அங்கையர்க்கண்ணி, புளியங்குடி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் ராஜாராம், சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி-க்கு பதிலாக காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் மனோகரன் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் விஜயகுமார், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி-க்கு பதிலாக காவல் ஆய்வாளர் பிரேமா, ஊத்துமலை காவல் ஆய்வாளர் தனலெட்சுமி அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் திருமதி அந்தோணியம்மாள், சிவகிரி காவல் ஆய்வாளர் கோவிந்தன் அவருக்கு பதிலாக ஜெயலட்சுமி, தென்காசி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சரஸ்வதி அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் சாந்த குமாரி, தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் பாலமுருகன், பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளர் சித்திரக்கலா அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, குருவிகுளம் காவல் ஆய்வாளர் முருகேசன் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் சண்முகவடிவு, அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் வேல்கனி,குற்றாலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், சங்கரன்கோவில் டவுன் crime காவல் ஆய்வாளர் சத்தியபிரபா அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் பிரவீனா, சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் ராஜா, தென்காசி crime காவல் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவருக்கு பதிலாக காவல் ஆய்வாளர் முருகேசன், தென்காசி மாவட்டத்தில் ALGSC பிரிவிற்கு காவல் ஆய்வாளர் சாந்தி செல்வி, IUCAW பிரிவிற்கு காவல் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி மற்றும் பிலோமினா, ATCU பிரிவிற்கு காவல் ஆய்வாளர் வெர்ஜின் சேவியா,EOW பிரிவிற்கு காவல் ஆய்வாளர் அக்னிஸ் பொன்மணி, PEW பிரிவிற்கு காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, Seriour Crime Squad காவல் ஆய்வாளர் பார்வதி, சைபர் க்ரைம் பிரிவிற்கு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, DCRB பிரிவிற்கு காவல் ஆய்வாளர் சமீம் பானு ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com