Home செய்திகள் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு கூட்டம்..

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு கூட்டம்..

by mohan

தென்காசி மாவட்டம் வடகரை கிராமத்தில் அச்சன்புதூர் காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் ஒரு கிராம காவலர் நியமிக்கப்பட்டு அவர்களின் மூலம் அக்கிராமத்தில் எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெறுவதற்கு முன்பே தகவல்கள் பெறப்பட்டு குற்ற சம்பவங்களை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகரை கிராமத்தில் சார்பு ஆய்வாளர் திரு. சஞ்சய் காந்தி அவர்களின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்களிடம் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றியும், கிராமத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் அவர்கள் பற்றியும், முக்கிய நபர்கள் வருகை பற்றியும், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர் பற்றியும், மணல் திருட்டில் ஈடுபடுபவர் பற்றியும், மற்றும் சந்தேக நபர் போன்றவர்களை குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களின் புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வண்ணம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதே கிராம காவலர்களின் பணியாகும். கிராம காவலர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்போது தான் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித செயல்கள் நடைபெறாமால் தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com