திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் இந்திய வரவு-செலவு திட்டம் – 2020 பற்றிய கல்லூரி கருத்தரங்கு நடைபெற்றது.சிறப்பு விருத்தினராக பங்கேற்ற கணக்குதணிக்கையாளர்(ஆடிட்டர்) குமரகுரு சி.ஏ, பங்குதாரர், ராஜராமன் மற்றும் அசோசியேட்ஸ்,மத்திய வரவு-செலவு திட்டம் – 2020 பற்றி சிறப்புரையாற்றினார்.அதில் பட்ஜெட், சட்டம், செயல்படுத்தல், விதிக்கப்பட்ட வரி சேமிப்பு, வரி செலுத்துவதில் இருந்து விலக்கு போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர் எடுத்துரைத்தார்.வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் . மதிவாணன் வரவேற்பு வழங்கினார்.இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி தலைமை உரையை நிகழ்த்தினார். கல்லூரி குழுத்தலைவர் பொன்பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரையில் 2020 மத்திய பட்ஜெட் வரி செலுத்துவர் பற்றி சிறு குறிப்புகளை வழங்கினார் .
கல்லூரியின் செயலர் பொன்ரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் வாழ்த்துறை வழங்கினார்கள்.கல்லூரியின் Dean. முனைவர்.பிரபாகரன் மாணவர்களுக்கு பட்ஜெட் மேம்பாடுகள் பற்றி சிறு குறிப்பு வழங்கினார்.இவ்விழாவில் 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் இறுதியில் வணிகவியல் துறை தலைவர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் நன்றியுறை கூறினார்.இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு துறைபேராசிரியர்களும், மாணவர்களும் ஒத்துழைப்பு நல்கி விழாவினை சிறப்புறச் செய்தனர்.
செய்தி: இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.
You must be logged in to post a comment.